நெல்லை பரணி (Nellai Barani)
கதை, கவிதை, இலக்கியம்.. இன்னும் வாழ்வைச் சுவையாக்கும் சுவாரஸ்ய விசயங்களை உள்ளடக்கிய பக்கம். (This blog contains information related to Stories, Poems, Literature, Temples and other interesting matters in Tamil)
சனி, 10 ஜூலை, 2021
வெள்ளி, 13 அக்டோபர், 2017
பத்துமலை முருகன், பத்துமலை, மலேசியா (Lord Murugan, Batu Caves, Malaysia)
பத்துமலை முருகன், பத்துமலை, மலேசியா
(Lord Murugan, Batu Caves, Malaysia)
(Lord Murugan, Batu Caves, Malaysia)
பற்பல படிகளேறி திருப்பாதம் பணிகையில்
அற்புத பலன்கள் அருளிடுவான் அழகுவேலன்..
நெடிதுயர் பொன்னிறத் திருமேனி முருகன்
வருந்துயர் போக்கி நல்வளம் தந்திடுவான்...
பத்துமலையானை தைப்பூச நன்னாளில் தரிசிக்கையில்
முத்துவேலவன் வல்வினை யாவும் தீர்த்திடுவான்...
வியாழன், 12 அக்டோபர், 2017
சனி, 25 ஜூன், 2011
திங்கள், 25 ஏப்ரல், 2011
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
ஓடக்கரை மாடசாமி, தேரிகுடியிருப்பு. (Odakkarai Madasamy, Therikudieruppu, Thoothukudi District, Tamil Nadu, India)
ஓடக்கரை மாடசாமி
(தேரிகுடியிருப்பு, திருச்செந்தூர் (வழி), தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு)
(தேரிகுடியிருப்பு, திருச்செந்தூர் (வழி), தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு)
ஓரிடம் இன்றி புவியெங்கும் பெய்திடும்
மாரிதம் ஈகைக் குணம் எமக்கீந்து
வேடம் போடா மாசற்ற மானிடராக
புடம் போட்டப் பொன்னென மிளிர
இப்பிறவி எனும் கடல் கடக்க
பகுத்தறிவு எனும் ஓடம்
தந்து
ஓடம் தனையோடக் காரராக இயக்கி
குலம் காக்கும் ஓடக்கரை மாடசாமியே
பாதம் பணிந்து சரண் அடைகிறோம்.
புதன், 25 மார்ச், 2009
சரி (Poem titled 'Sari')
சரி
ஏற்றமுடன் வாழ்ந்திட சின்னத்தம்பியே பின்பற்றிடு நன்னெறி
பெற்றவர் கூறிடும் அறிவுரையை அனுதினமும் அனுசரி..
உற்றவர் உன்னில்லம் வருகையில் உவகையுடன் உபசரி..
தெய்வத் திருநாமத்தை நாளும் உளமார உச்சரி..
வாய்மை பேசுமாறு இளையோரை நயமாய் நச்சரி..
தீது செய்வோரைக் காண்கையில் எதிர்த்து எச்சரி..
பொது அறிவைப் பெருக்கிட படித்திடு தினசரி..
நல்லது யார்கூறினும் மறுக்காது சொல்லிடு சரிசரி..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)